Tuesday, December 26, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 4)

இந்த இடுகையின் இரண்டாவது பாகத்தில் வந்த நண்பர் ஆசாத்தின் பின்னூட்டங்கள் முக்கியமான கேள்விகளை முன்வைத்தன. அவை நான் இதுவரை பெரிதும் சிந்தித்திருக்காததும், இப்போது என்னைச் சிந்திக்கத் தூண்டியவையும் ஆகும். "பெண்ணுரிமை என்பது ஒரு ஒருமித்த திட்டம், அதற்கான அரசியல் இயக்கம் எல்லாம் இல்லாமல் வெற்றிபெறமுடியுமா?" என்கிற அவரின் கேள்வியைத் தொடர்ந்து எனக்கும் அவருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றங்களை, அவரின் இறுதியான பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக எனக்குள் விழைந்த எண்ணங்களையும் எழுதி (வழக்கம்போல் அவை நீண்டுவிட்டதால்:)) இங்கு தனிப்பதிவாக இடுகிறேன்.

ஆசாத்தின் முதல் பின்னூட்டம்:

I have appreciate your expectation about the fellows of Virtual world(net blog).

My quet. is simple. Can win Feminism without a plan, party, Tactics ... etc?

If cant't what is the unique plan for it. If ok please describe it now.

Second, all feminst thoughters have such freedom at family than other Females. Why are fought against that feminine has treated as a Commadity in India.?

Third, why this type of independent personalities have not became the Social activities (Politics like against the mass struggle against Hindu Fascism & Imperialistic USA


என் மறுமொழிஆசாத்,
முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். மறுமொழிக்கு நன்றி. பெண்ணியத்திலிருந்து மேலும் விரிவான இடங்களைத் தொடுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்குப் பதில் சொல்ல உள்வாங்கிடும் வகையில் இன்னும்கூட விரித்து நீங்கள் நினைப்பதை முடிந்தால் எழுதுங்களேன்.


ஆசாத்தின் இரண்டாவது பின்னூட்டம்
I am aasath

I can't know that to describe my previous question? ... If possible, can anyone tell it now.

Without any Party (political) how feminism will success?

On Kairanchi Massacare also, Females have treated as a property of Dalits. How you accept it?

All of you (so-called female feminists) have such small freedom in your home (ie, family). Then why you can't come in front of the peasants' struggle, Peoples struggle, .... Govt. employees struggle against privitization, trying of form a Union at IT employees also. I need the explanation?



என் மறுமொழி

நண்பர் ஆசாத்,
உங்களின் பார்வைகளுக்கான பின்னணியை அறிய விரும்பியே உங்களை மேலும் எழுதக் கேட்டது. நீங்கள் அப்படி விரிவாக எழுதாதபோது நான் பதில்சொல்லிக்கொண்டிருப்பது இருவரும் ஒரு புள்ளியில் இல்லாமல் அவரவர் திசைகளில் பேசிக்கொண்டிருக்க
வித்திடலாம். இப்போது நீங்கள் மீண்டும் விளக்கம் வேண்டும் என்று (மட்டுமே) கேட்டிருப்பதால் இதை எழுதுகிறேன்.

பெண்விடுதலை பற்றிய சிந்தனைகள் ஒரே இயக்கமாக ஒரு குடையின்கீழ் வராதிருப்பினும் சமீபத்திய நூற்றாண்டுகளில் இதுபற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அதன் விளைவாக உலகெங்கும் தோன்றிய சிறுசிறு இயக்கங்களின் எழுச்சிகளும், போராட்டங்களுமே இன்று
பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள்வரை கொண்டுவந்திருக்கிறது. நம் ஊரிலும் இயங்கிவரும், அரசுசார்ந்த மகளிர் ஆணையங்களில் இருந்து, கட்சிசார்ந்த ஜனநாயக மாதர் இயக்கங்கள் வரை இதில் சேரும்.. அடிமட்டப் பெண்களின் அன்றாட வாழ்வாதாரப்
பிரச்சினைகளைக் களைவதில் சிறந்து விளங்கும் இன்றைய மகளிர் சுய உதவிக்குழுக்களைக்கூட நான் இதனடிப்படையில் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகிற, அவர்களுக்கு வேண்டியது செய்கிற பல சமூக இயக்கங்களையும் பார்க்கிறோம். இவையெல்லாம் தத்தம் பணிகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது அவற்றின் பலம் இன்னும் கூடும் என்பது உண்மையே.

எங்களைப்போல் பெண்ணுரிமைபற்றிப் பேசுகிற பெண்கள் வீதிக்குவந்து போராடவேண்டும் என்கிற உங்களின் ஆவல் பாராட்டுதலுக்குரியது. இப்படியான பெண்கள் உங்களின் கண்களில் விழுகிறவண்ணம் வெளியில்வந்து போராடவில்லை என்பதால் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள் கிடையாது. சிறுசிறு பணியாகவேனும் அவரவருக்கு முடிந்த தளங்களில் இயங்குகிறவர்கள் நிறைய உண்டு. என்றாலும் முழுமையாக அரசியல், சமூகத் தளங்களுக்கு பெண் தன் பங்களிப்பை வழங்க முன்வராமைக்குப் பலகாரணங்கள் உள்ளன. இங்கெல்லாம் இயங்கும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் எப்படியானவை என்பதை நாம் அறிவோம். வேலையா, குடும்பமா என்று வருகிறபோதே வேலையைவிட்டுக் குடும்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை தருவதற்கே இன்றும் பெண்கள் வலியுறுத்தப்படுகிற சமூகத்தில் பொதுவாழ்வில் இன்னும் பெண்களின் பங்கு அதிகமாக, பெண்களைவிடவும் சமூகமே தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஜெயிலுக்குப் போன பெண்களில் இருந்து இன்று ஒரு போராளியாகக் களத்தில் இருக்கிற மேதாபட்கர் வரை உண்டு.

பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் இந்து பாசிசத்திற்கெதிராகவெல்லாம் போராடவில்லை என்கிற உங்களின் முதல் பின்னூட்டக் கேள்விக்கு என் பதில்:-

மதங்களில் இந்து மதம் என்றில்லை, பொதுவாக எல்லா மதங்களுமே இன்றும் பெண்ணுக்குரிய அங்கீகாரங்களை வழங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. பெண்ணடிமையைப் பேணிக்காப்பதில் மதங்களுக்கு நிறையப் பங்குண்டு. அவற்றிற்கெதிரான பெண்களின் குரல்களையே இன்னும் அவர்கள் முழுமையாக எழுப்பமுடியாவண்ணம் அங்கங்கு மதங்களின் அரண்களாய் மனிதர்களும், மத அமைப்புகளும் நின்றுகொண்டிருக்கையில் அடுத்த கட்டம் நோக்கிய பயணங்களுக்குப் பெண்கள் ஏன் வரவில்லை என்று கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் ஐடி பணியாளர்களின் சங்கம் அமைப்பதிலும் பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் முன்வரவில்லை என்று முடித்திருக்கிறீர்கள்:)) உலகின் எல்லாவேலைகளையும் இனிப் பெண்விடுதலை பேசுபவர்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும்போல் தெரிகிறதே:)) இந்த இடுகையின் அடுத்த பாகத்தில் நண்பர் செந்தில்குமரனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். பெண்விடுதலை என்பதே பெண்கள் மட்டும் செய்யவேண்டிய வேலை அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவம் பெறுவதுதான் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அவ்வகையில் பெண்விடுதலை என்பதும் பெண்களின் பிரச்சினை மட்டுமேயில்லை. அது சமூகத்தின் பிரச்சினை. அதைக் களைவதில் ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே சமமான கடமைகள் உண்டு. ஐடியில் எனக்குத் தெரிந்து மேலாளர்களாகவும், உதவி மேலாளர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பான்மை ஆண்களே. அதிலேயே இன்னும் சமத்துவம் முழுமையாக வந்தபாடில்லை. இதில் சங்கம் அமைக்க மட்டும் பெண்கள் வந்து போராடவேண்டும் என்றால் எப்படி:)) ஆனாலும் அப்படி ஒரு கருத்து செயல்வடிவம் பெறும்போது அத்துறைசார்ந்த பெண்களும் அதற்குக் குரல்கொடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். நன்றி.



ஆசாத்தின் மூன்றாவது பின்னூட்டம்
i am aasath

You thought that your view is for the way of acheive of freedom to Feminine gender.

Do Any struggle against suffering in world is done by feminist or Comminist?

So everybody in the world whom suffered by class/gender/community can join with them to fight against the Backward thoughts/System. Then, which weapon could guide to us?

Marxism-Leninism or Like Self-support groups, or NGOs of Patkar.

Please form the anger to the semi-feudal society to prevent the females' social activities. Individuals anger haveen't good enough. It forms a plan, party with whom is fighting for the sufferers. Through this struggle, all feminine genders also growth their soccial activities as civilizing Homozapeans.

You got such minimized rights from your former rebelions. What is the consequent history for it without plan?

Shall you justify?

Without promotion of Manager in IT field, why females to try to form a union for struggle. If female or male got it, they should corrupted by the neo-Capitalist societies Strategy. He don't come in front of the struggle.


அதன்பின் எழுதி நான் இப்போது சேர்த்திருப்பவை

ஆசாத்,

நீங்கள் சிந்திக்கும் கோணத்தின் ஒரு நுனியை (யாவது) பிடித்துவிடும் தெளிவை உங்களின் இந்தப் பின்னூட்டம் எனக்கு அளித்துள்ளது. நீங்கள் தெளிவாக எழுதவில்லை என்பதைவிட, நான் இதுவரை அப்படியான ஒரு பார்வையில் தீவிரமாக இதைச் சிந்திக்காதிருந்ததும்கூட காரணமாக இருந்திருக்கலாம், உங்களின் கருத்துக்களை எடுத்தவுடன் சட்டென்று உள்வாங்கிடமுடியாமல் போனதற்கு. ஆனாலும் எனக்கு இந்த இடுகையில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது உங்களின் பின்னூட்டம். நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து என்னை இன்னொரு நிலைக்கு அதற்குரிய தர்க்கரீதியான காரணங்களுடன் எடுத்துப்போகும் எழுத்துக்களை நான் விரும்புகிறேன்.

இதற்கான ஒரு ஆயுதம் என்று ஒரேயொரு குறிப்பிட்ட இசத்தை மட்டும் என்னால் சொல்லிவிடமுடியவில்லை. வர்க்கப்பிளவுகளை, முதலாளித்துவத்தை, எதேச்சாதிகாரத்தை, ஆதிக்க மனோபாவத்தை எதிர்த்த எல்லா இசங்களும் பெண்விடுதலையை ஆதரிப்பவை எனச்
சொல்லிக்கொள்பவையே. ஆனால் அவையும் இதற்கொரு முழுமையான தீர்வாக இருந்தனவா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம் தொழிலாளர்களின் நலன் விரும்புவர்கள் முதலாளித்துவநிலையை மட்டும் எதிர்த்தால் போதும். அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு சிறுபான்மை இனத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் அதன் உடனடியான அடுத்த ஆதிக்கசக்தியை எதிர்த்தால் போதும். ஆனால் தொடர்ச்சியான வலைகளால் பின்னப்பட்டு ஆரம்ப நுனி தேடிச் சிக்கல் அவிழ்க்கப்படவேண்டிய இடங்களில் இது கடினமாகிறது. இந்து மதத்தில் சாதிகளை ஒழிக்க முடியாமல் இருப்பதற்கு, அடிமட்டத்தில் வைக்கப்பட்டவன் அங்கேயே வருந்திக்கொண்டிருப்பதற்கு
நான் இதையே காரணமாகப் பார்க்கிறேன். பெண்விடுதலையும் இதைப்போல் பல வலைகளுக்குள்ளும் சிக்குண்டிருக்கிறது.

நாம் பெண்விடுதலையை முற்றிலுமாக அடைவதற்கு எதிர்க்கவேண்டியவைகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் எதிர்க்க வேண்டி வரும், குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் பிரச்சினைகளுக்கு அப்பிரச்சினைகளுக்கு
காரணமானவர்களை மட்டும் எதிர்க்க முடியாது, அப்படியான சாதகமான ஒரு சூழலை அவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கும் குடும்பம் என்கிற அமைப்பையே எதிர்க்க வேண்டிவரும். பெண்ணுக்குத் தியாகப் பட்டம் கொடுத்து அவளை உச்சாணியில் உட்காரவைத்திருப்பதாய்ச் சொல்லும் புராணங்களைப் புனிதங்களை எதிர்க்கவேண்டிவரும். இப்படி இன்னும் பலவலைகளைக் கொண்டிருக்கும் இந்த விடயத்திற்கு இவ்வளவையும் எதிர்க்கும் முகமாக ஒரு ஆயுதம் வேண்டும் என்கிற உங்கள் வாதம் நியாயமானதே. அப்படியொரு ஆயுதத்தால் மட்டுமே இது ஒட்டுமொத்த விடியலாவதற்குச் சாத்தியங்களும் உண்டு என்பதை என்னாலும் உணரமுடிகிறது.அவ்வகையில் பார்த்தால் பெண்ணுரிமை இயக்கங்கள் என்பவை அந்தநிலையை இன்னும் எட்டவில்லை என்பதை ஒத்துக்கொள்வதிலும்
எனக்குச் சங்கடமில்லை. ஆனால் அதற்கு அவ்வகை இயக்கங்கள் முயலவேயில்லை என்றும் குற்றம்சாட்ட என்னால் முடியவில்லை. காரணம் அதன் செயலாக்கங்களுக்கான சிந்தனைவடிவைக்கூட அடையமுடியாவண்ணம் இங்கு அறியாமையும், அயோக்கியத்தனங்களும் மண்டிக்கிடக்கின்றன. இவ்விடயத்தில் நான் அறியாமைக்குப் பலியான, மதங்களின் புனிதங்களைக் கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்
பழகிய பெண்களையும் (படிக்காதவர்களைவிடப் படித்தவர்களும்) தைரியமாக விரல்நீட்டிச் சுட்டுவேன். எனவேதான் பெண்கள் வேலைக்குப் போகத் தேவையில்லை என்று மதங்களின் பீடங்களும், "பெண்ணா, லட்சனமா அடக்கமா இரு" என்று சூப்பர்ஸ்டார்களும் வசனம் பேச
முடிகிறது. எங்காவது எதிர்ப்பை எழுப்பும் சிலபெண்களின், ஆண்களின் குரல்களும் வெளித்தெரியாவண்ணம் சுற்றிலும் அதன்மீதான விமர்சன இரைச்சல்கள் கேட்கத் தொடங்கிவிடுகின்றன.

இந்தவகையில் இசங்களும்கூட அவற்றைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் மூலம்(அரசியல் இயக்கங்களானாலும்) தோல்வியைத் தழுவுகின்றன என்பதைத் தமிழ்நாட்டில் கற்பு பற்றிக் கருத்துச்சொன்ன நடிகை குஷ்புவுக்கு எதிராக விளக்குமாறெடுத்துப்
போராடவேண்டிய நிலைக்குப் பெரியாரியவாதிகள் போனதை வைத்துச் சொல்லலாம். பெண்விடுதலை என்பது ஒரு அரசியல் இயக்கமாகவோ அதன் ஆயுதமாக அதற்கென்று ஒரு இசமோ உருவாகும்வரை அழைத்துச்சென்று ஊக்கப்படுத்தவேண்டியவர்களே இப்படிச்
சறுக்கிவிழுவதும், பிறகு அதற்காகக் காத்திருந்த வெறும்வாயை மெல்லும் மதவாதிகளுக்கு, இன்னபிற ஆதிக்க சமூகங்களுக்கு அவல் கிடைத்து, அதுவே முக்கியமாகிவிடுவதும் இயல்பாக நடக்கிறது. இத்தனை கரடுமுரடான பாதைகளைக் கடந்துதான் நீங்கள் சொல்கின்ற
ஒரு கனவை அடையமுடியும். இருந்தாலும் இடைவிடாத தேவைகளும், போராட்டங்களும் இதையும் ஒருநாள் சாத்தியமாக்கும் என்றே நம்புவோம்.

பெண்ணுரிமைவாதிகள் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இருக்கிறார்கள். பாரதியாலும், பெரியாராலும் சொல்லமுடியாத ஒரு பெண்விடுதலையை ஒரு பெண் பெண்ணுரிமைவாதிதான் சொல்லமுடியும் என்றில்லை. எனவே நீங்கள் சொல்லுகிற பெண்
பெண்ணுரிமைவிரும்பிகள் மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்கிற கருத்தில் எனக்கு இப்போதும் உடன்பாடில்லை. ஒடுக்கப்பட்ட இனத்துக்குக் குரல்கொடுப்பதாய்ச் சொல்லும் இசங்கள், அவற்றைக் காப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட இயக்கங்கள், பெண்விடுதலையை
மானிடவிடுதலையாகப் பார்க்க முடிகிற பெண்கள், ஆண்கள் எல்லோருமே இணைந்து நீங்கள் சொல்லும் இடம்நோக்கி நடக்கலாம். எழுத்து, செயல் என்று கொஞ்சமேனும் இதை உணர்ந்து சிறிதுசிறிதாகச் செயல்பட முயன்றிருக்கிற பெண்களுக்கு எதிராகக் கிளம்பும்
எகத்தாளக் கொக்கரிப்புகளை சமூகத்திலிருந்து அகற்றிக்கொடுக்கவேண்டிய கடமை மேற்சொன்ன அனைவருக்கும் உண்டு.

மற்றபடி ஆசாத், மீண்டும் என் மனமார்ந்த நன்றி உங்களுக்கு. உங்களின் மற்ற எழுத்துக்களின் தன்மையைக் கண்டுணர விரும்பி உங்கள் பக்கத்துக்குப் போனேன். ஆங்கிலத்தில் ஒரேயொரு பதிவு மட்டும், ஒன்றேயென்றாலும், நன்றாக எழுதப்பட்டிருந்த அந்தப் பெரியார் பற்றிய பதிவும் பிடித்தது. உங்களைப்போன்றவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும். உங்களுக்குத் தமிழில் எழுத ஏதும் பிரச்சினை இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள், எனக்குத் தெரியாவிட்டாலும் நண்பர்கள் உதவுவார்கள். தமிழிலும் நீங்கள் எழுதவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாய் இதைச் சொல்லுகிறேன்.

1 comment:

தமிழ்நதி said...

மதிப்பிற்குரிய தோழிகளுக்கு,

உங்கள் வலைப்பக்கம் நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தது.

காலாகாலமாக நம்பிக்கொண்டிருக்கும் மரபுசார் அடிப்படைகளின் மீது கேள்வி எழுப்புவது என்பதை ஆண்களின் இருப்பை அசைத்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே நிறையப்பேர் கருதுகிறார்கள். பெண்ணியம் பேசுகிறவர்கள் என்றால், கணவனை எதிர்த்துப் பேசி, சமையலைப் புறக்கணித்து, உதட்டுச்சாயம் பூசி, டக் டக் என பாதணி ஒலியெழுப்ப நடந்துபோகிற திமிரே வடிவமான ஒரு உருவமே பலருக்கு நினைவில் வருகிறது. பெண்கள் மீதான ஆண்களின் அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வை மாறவேண்டும், அடிப்படையான உணர்வுநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும் என விரும்புவதை, மேற்குறித்த சித்திரத்துக்குள் அடக்கிவிட முயலுவதே நடந்துகொண்டிருக்கிறது. பேசிப் பேசி என்ன ஆகப்போகிறது என்றாலும் பேசாதிருக்கவும் முடியவில்லை அல்லவா…?