Monday, September 11, 2006

நாங்கள் நாங்களாக இருக்கிறோம்

சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம் என்பது போல யார் வேண்டுமானாலும் பெண்களுக்கு அறிவுரை சொல்லலாம். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று. கம்பனின் சீதையாய் இரு, இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாய் இரு என்றெல்லாம் ஒரே அறிவுரை மயம்.

மண்பார்த்து நடக்காவிட்டால் தடுக்கி விழுந்துவிடுவார்கள் பெண்கள் என்று எத்தனை கவலை.
ஓட்டமாய் ஓடும் இந்த காலத்தில் அடுத்தவர் பற்றி இப்படி கவலை பட்டு சமுதாயத்தின் சீரழிவை தடுக்கும் இத்தகய மாமனிதர்களை பெற இந்த வலைப்பதிவுலகம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்.

வானும் காற்றும் கூட சுத்தமாய் இல்லாத நாளில் பெண்களின் சுத்தம் பற்றியும் அந்த நிர்மலமான சுத்தத்திற்கு தீங்கு வரக்கூடாதென்று கவலைப்படும் நல்ல உள்ளங்களின் தன்னலமற்ற தன்மையை எதைச்சொல்லி பாராட்டுவேன்.

எது சுத்தம் என்பதை யார் வரையறுத்தது?ஆண் வரையறுத்தான் என்றால் அவனின் அளவுகோல் கொண்டு பெண்ணை அளக்கும் வன்முறையை யார் சொல்லித்தந்தது? சுத்தமாக நீரும் காற்றும் கூட இல்லாத போது ஏன் பெண்கள் மட்டும் கண்ணுக்கு தெரியாத எதுவோ ஒன்றை காப்பாற்றி பூமியின் நிதர்சனத்தை தாண்டி இருக்க வேண்டும். பூமியில் வாழ வேண்டும், ஆனால் ஆசைகள் அடக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆண்கள் எழுதிய விதிகளுக்கு உட்பட்டு, இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு பாரத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து திரியவேண்டும்?

இந்திரா நூயியை பாராட்டக்கூட இவர்களுக்கு அவருடைய நிர்வாகத்திறனோ இல்லை ஆளுமையோ கிடைக்காது. தன் குழந்தைகளுக்கு தானே தயிர்சாதம் தருவது தான் திருப்தி தரும் என்றார், இன்னமும் பாரம்பரியங்களை விடாமல் இருக்கிரார் என்று தேடி காரணங்கள் அடுக்குகிறார்கள்.

யோசிக்க ஆரம்பித்ததும் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் பெண்களின் தப்பு, பெரியவர் சொன்னது பெருமாள் சொன்னது மாதிரி என்று கேட்காமல் நுகத்தடி மாடாய் உழன்று கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நிறைய பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜவாய் சாப்பிட்டு காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.

கம்பனின் சீதையாகவோ இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாகவோ இருக்க வேண்டுமா என்ன? பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டு போகட்டும் அவரவர்க்கு பிடித்தமாதிரி அவரவர்க்கு ஏற்ற மாதிரி. நீங்கள் சொல்ல வேண்டாம்; வேண்டும் போது கலவி கொள்ளுங்கள் என்று, நீங்கள் சொல்ல வேண்டாம் பார்த்து நட என்று. எதையுமே நீங்கள் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டுவிட்டாலாவது நிம்மதியாய் இருக்கும். பிறந்த உடன் சுவாசிக்கும் காற்று போல நாங்கள் இருந்துவிட்டு போகிறோம் தன்னிச்சையாக.

இங்கே இருக்கும் தலைவர்களுக்கும் அது அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், பெண்களுக்கு புத்தி சொல்வதென்றால் பாயாசம் சாப்பிடுவது மாதிரி.மடாதிபதியாட்டும் இல்லை மந்திரியாகட்டும், குழந்தைத் தொழிலாளிகள் பற்றியோ பெருகிவரும் வன்முறைகளை பற்றியோ இல்லை தேவைக்கும் அதிகமாக பெருகிவரும் சுற்றுப்புற மாசு பற்றியோ கவலை இருக்கிற மாதிரி தெரியவில்லை. ஆனால் எல்லாருக்கும் பெண் என்ன செய்துவிடுவாளோ என்ற கவலை மட்டும் அடிமட்டத்தில் இருக்கிறது.

உடல் நிலையில்லை,அழியக்கூடிய ஒன்று என்றால் இத்தனை கவலை ஏன்? பெண்களின் நிலையில்லா உடம்பைப் போற்றி பாதுகாக்க பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர அடியில் புரையோடிப்போன சீழும் சகதியுமாய் இருக்கிற தங்களின் மன அழுக்கை பற்றி யாருக்கும் கவலையில்லை.ஒவ்வொருமுறை பேசும் போதும் எழுதும் போது இந்த சீழ் வெளிப்பட்டு அவர்கலிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது உன் மனம் அடியில் எப்படி புரையோடி போயிருக்கிறது என்று. கவலைப்படத்தான் ஆளில்லை.

Saturday, September 02, 2006

சக்தி: அறிமுக இடுகை

வாசகர்களுக்கு வணக்கம். இம்முறை சக்தியாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுவரை ஊடகங்கள், வலைப்பதிவுகலள் இவை அனைத்திலும் பெண்களின் விடுதலை பற்றியும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றியும் பல கோணங்களில் பேசியும் எழுதுயுமாகி விட்டது. ஆனாலும் இன்னமும் பலருக்கு பெண்விடுதலை என்பது வேண்டும் போது விருப்பட்டவரோடு கலவி கொள்ள கிடைக்கும் சுதந்திரமாகவும் இன்னும் சிலருக்கு மதுஅரங்கில் மது அருந்தவும் விருப்பம்போல நடனமாட பெண்கள் போராடுவதாகவும் தோன்றுகிறது. இன்னும் சிலருக்கோ பெண்கள் சுதந்திரம் என்பது தமிழகத்து பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்க வந்த பண்பாக தோன்றுகிறது.

இன்னும் சிலருக்கோ பொருளாதார சுதந்திரம் இன்றி இன்னொருவரை அண்டி வாழும் பலருக்கு சுவாசிக்கும் காற்று கூட அனுமதியோடுதான் கிடைக்கிறது என்னும் போது உன் சிறகுகளை உபயோகித்து பறந்து போ என்று சொல்வதன் வன்முறை புரியவில்லை. இவற்றை பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் என்ன பயன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும் பெண்களின் தொலைத்த அல்டையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

படித்த படிப்பு கற்றுத்தேறும் அறிவும் சிந்தனையை வளர்க்கும். அந்த சிந்தனைகள் நல்ல வழிகளை தேடித்தரும். ஆனாலும் இங்கே வலை உலகில் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்குமே பெண்விடுதலையின் அடிப்படை புரியவில்லை.

எவ்வாறாக பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிவை தேடும் வாய்ப்புகள் அந்த அறிவால் சிந்தனையால் அவர்கள் விட்டு விடுதலையாகி விடுவார்களோ என்ற ஐயத்தால் ஒடுக்க பட்டனவோ அதேபோல பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆன்களிடையே இல்லாதது போல பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றிவிவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

பெண்களே தங்கள் வழ்வை தாங்களே நிர்ணயித்து கொள்கிற அடிப்படை சுதந்திரம் எது என்று கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் சமுதாயம் கலாச்சாரம் என்ற பொருளில்லா நிலைமைகளில் இருந்து மீளவும் இத்தகைய பதிவுகள் அவசியம் என்றே உணர்கிறோம்.

வாழ்க்கையின் நிறங்களை அழகாகச் சொல்லும் செல்வநாயகி, அற்றம் பத்திரிக்கை மூலமாக பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் பிரதீபா, அறிமுகம் எதுவும் தேவையில்லா வகையில் பலரும் அறிந்திருக்கும் மதி கந்தசாமி மற்றும் நானும் சேர்ந்து இங்கு எழுத எண்ணி இருக்கிறோம்.




அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்


என்ற பாரதியின் வரிகளுக்கொப்ப இந்த பதிவுகள் நலிந்தவர்களுக்காகவும், வலையுலகில் நிலவி வரும் பெண்கள் மீது மிக சுலபமாக வாரிவிடும் அவதூறுகளை எதிர்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சி.

-பத்மா அர்விந்த்

சக்தி: அறிமுக இடுகை

வாசகர்களுக்கு வணக்கம். இம்முறை சக்தியாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுவரை ஊடகங்கள், வலைப்பதிவுகலள் இவை அனைத்திலும் பெண்களின் விடுதலை பற்றியும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் பற்றியும் பல கோணங்களில் பேசியும் எழுதுயுமாகி விட்டது. ஆனாலும் இன்னமும் பலருக்கு பெண்விடுதலை என்பது வேண்டும் போது விருப்பட்டவரோடு கலவி கொள்ள கிடைக்கும் சுதந்திரமாகவும் இன்னும் சிலருக்கு மதுஅரங்கில் மது அருந்தவும் விருப்பம்போல நடனமாட பெண்கள் போராடுவதாகவும் தோன்றுகிறது. இன்னும் சிலருக்கோ பெண்கள் சுதந்திரம் என்பது தமிழகத்து பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்க வந்த பண்பாக தோன்றுகிறது.

இன்னும் சிலருக்கோ பொருளாதார சுதந்திரம் இன்றி இன்னொருவரை அண்டி வாழும் பலருக்கு சுவாசிக்கும் காற்று கூட அனுமதியோடுதான் கிடைக்கிறது என்னும் போது உன் சிறகுகளை உபயோகித்து பறந்து போ என்று சொல்வதன் வன்முறை புரியவில்லை. இவற்றை பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் என்ன பயன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும் பெண்களின் தொலைத்த அல்டையாளங்களை தேட, சுதந்திரமாக சுவாசிக்கும் காற்றின் இன்பத்தை நுகர கற்று கொள்ளவும் அந்த அனுபவத்தை தேடி பெறவும் இன்னமும் மேலாக சகல அநீதிகளுக்கும் எதிராகவும் தொடர்ந்து எழுதுவது அவசியமாகிறது.

படித்த படிப்பு கற்றுத்தேறும் அறிவும் சிந்தனையை வளர்க்கும். அந்த சிந்தனைகள் நல்ல வழிகளை தேடித்தரும். ஆனாலும் இங்கே வலை உலகில் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்குமே பெண்விடுதலையின் அடிப்படை புரியவில்லை.

எவ்வாறாக பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிவை தேடும் வாய்ப்புகள் அந்த அறிவால் சிந்தனையால் அவர்கள் விட்டு விடுதலையாகி விடுவார்களோ என்ற ஐயத்தால் ஒடுக்க பட்டனவோ அதேபோல பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆன்களிடையே இல்லாதது போல பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றிவிவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

பெண்களே தங்கள் வழ்வை தாங்களே நிர்ணயித்து கொள்கிற அடிப்படை சுதந்திரம் எது என்று கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் சமுதாயம் கலாச்சாரம் என்ற பொருளில்லா நிலைமைகளில் இருந்து மீளவும் இத்தகைய பதிவுகள் அவசியம் என்றே உணர்கிறோம்.

வாழ்க்கையின் நிறங்களை அழகாகச் சொல்லும் செல்வநாயகி, அற்றம் பத்திரிக்கை மூலமாக பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் பிரதீபா, அறிமுகம் எதுவும் தேவையில்லா வகையில் பலரும் அறிந்திருக்கும் மதி கந்தசாமி மற்றும் நானும் சேர்ந்து இங்கு எழுத எண்ணி இருக்கிறோம்.




அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்


என்ற பாரதியின் வரிகளுக்கொப்ப இந்த பதிவுகள் நலிந்தவர்களுக்காகவும், வலையுலகில் நிலவி வரும் பெண்கள் மீது மிக சுலபமாக வாரிவிடும் அவதூறுகளை எதிர்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சி.

அச்சமில்லை, அமுங்குதலில்லை

அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்