Saturday, September 02, 2006

அச்சமில்லை, அமுங்குதலில்லை

அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை
ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்,
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கு மஞ்சோம், எப்போழுது மஞ்சோம்

No comments: